பரந்தன் பங்கில் இளையோர் ஒன்றியத்தை மீள் உருவாக்கம் செய்யும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரந்தன் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

பரந்தன் பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து இளையோருக்கான கருத்தமர்வும், உடையார்கட்டு இளையோர் ஒன்றிய பிரதிநிதிகளின் அனுபவ பகிர்வும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் உடையார்கட்டு பங்கிலிருந்து 6 இளையோர் உட்பட 23 வரையான இளையோர் பங்குபற்றினர்.

By admin