தாளையடி கடற்கரை புனித வேளாங்கன்னி அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் அருட்தந்தை இம்மானுவேல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் திருப்பலி நிறைவில் இவ்வருடம் நடைபெற்ற கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் மறைக்கல்வி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.

By admin