இலங்கை நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திரு. அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் பதிவியேற்றுள்ள நிலையில் நாட்டின் அரசியல் மற்றும் அரச நடவடிக்கைகளில் பாரிய மாற்றங்கள் நடைபெற்றுவருவதுடன் அரச அதிகாரிகளுக்கான புதிய நியமனங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வடமாகாணத்தின் புதிய ஆளுநராக திரு. வேதநாயகன் அவர்கள் ஜனாதிபதி அவர்களால் நியமனம் பெற்று 25ஆம் திகதி கடந்த புதன்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.

தொடர்ந்து 27ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஆளுநர் செயலகத்தில் இவர் தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சமய தலைவர்களின் ஆசீரோடு பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து ஆசீர் வழங்கினார்.

இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், தேசிய மக்கள் சக்தி நிறைவேற்று குழு உறுப்பினரும் முந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

By admin