யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் பொதுநிலை பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை ஆரம்பிக்கப்பட்டதன் 90ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு கடந்த 23ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.

ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து அன்றைய தின சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் நினைவுமலர் வெளியீடும் இடம்பெற்றது.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், குருக்கள், துறவிகள், பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை அங்கத்தவர்களென பலரும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

 

By admin