வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு யெகமீட்பர் விளையாட்டுக்கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட “கொன்சாலஸ் கிண்ணம்” உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டி பங்குத்தந்தை அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் தலைமையில் கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வலைப்பாடு யெகமீட்பர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

வலைப்பாடு பங்கின் முன்னைநாள் பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமரர் கொன்சாலஸ் அவர்களின் நினைவாக நடைபெற்ற இத்தொடரில் வடமாகாணத்திலிருந்து 45 அணிகள் பங்குபற்றியதுடன் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பள்ளிமுனை புனித லூசியா அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை கொன்சாலஸ் அவர்கள் ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைதந்து வலைப்பாடு பங்கில் பணியாற்றிய காலத்தில் யெகமீட்பர் விளையாட்டுக் கழகத்தை ஆரம்பித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin