தர்மபுரம் பங்கில் முதல்நன்மை அருட்சாதனம் பெறவுள்ள பிள்ளைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு 28ஆம் திகதி சனிக்கிழமை இன்று தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பாசறை நிகழ்வில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் டயானா மற்றும் பிரியா ஆகியோர் வளவாளர்களாக கலந்து திருச்செபமாலை, நற்கருணை வழிபாடு, பாவசங்கீர்த்தன அருட்சாதனம், குழுவிளையாட்டுக்கள், படக்காட்சிகள், கருத்துரைகள் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினார்கள்.

இந்நிகழ்வில் 08 சிறார்களும் சிறார்களின் பெற்றோர்களும் ஞானப்பெற்றோர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin