தேசிய மறைக்கல்வி தினத்தை சிறப்பித்து நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 50 வரையான மறைக்கல்வி மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin