தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு கரவெட்டி பங்கில் மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருயாத்திரை கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் மறையாசிரியர்களும் மன்னார் மறைமாவட்டத்திற்கு சென்று அங்கு மடுத்திருத்தலம், மாந்தை புனித செபமாலை அன்னை ஆலயம், சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயங்களை தரிசித்தனர்.

இந்நிகழ்வில் 64 மறைக்கல்வி மாணவர்களும் 10 மறையாசிரியர்களும் பங்குபற்றினர்.

By admin