கொழும்பு AQUINAS உயர் கல்லூரியில் உருவாக்க பயிற்சி பெற்றுவரும் அருட்சகோதரிகள் அன்பிய வாழ்வு தொடர்பான கள அனுபவ பயிற்சியை பெறும் நோக்கோடு யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு பேராலயம் மற்றும் குருநகர் பங்குகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

அருட்தந்தை ரவிச்சந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 16ஆம் திகதி திங்கட்கிழமை வரை நடைபெற்ற இந்நிகழ்வில் அன்பியங்களை தரிசித்து அவர்களுடன் இணைந்து இறைவார்த்தை பகிர்வுகளை மேற்கொண்டு மக்களோடு உரையாடி அவர்களின் அனுபவங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் 16ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து ஆயரின் ஆசீரை பெற்றுக்கொண்டதுடன் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தையும் தரிசித்தார்கள்.

6 நாடுகளின் 12 துறவற சபைகளை சேர்ந்த 33 அருட்சகோதரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin