இலங்கை ஆயர் பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட சிறிய குருமட மற்றும் துறவற சபை அதிபர்களுக்கான தொடர் உருவாக்க பயிற்சி கடந்த 13,14,15ஆம் திகதிகளில் கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் நடைபெற்றது.

இறை அழைத்தல் ஆணைக்குழுவிற்கு பொறுப்பான கண்டி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை வலன்ஸ் மென்டிஸ் அவர்களின் தலைமையில் திருவுள பணியாளர் சபை அருட்தந்தை லொயிட் சாந்திகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள், கலந்துரையாடல்கள் என்பன
இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மறைமாவட்ட மற்றும் துறவற சபை சிறிய குருமட அதிபர்களென 34 பேர் பங்குபற்றியிருந்தனர்.

By admin