பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட எட்டாவது டிராகன் படகுப் போட்டி கடந்த 14,15,16ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பிரதேசத்தில் நடைபெற்றது.

15வரையான அணிகள் பங்குபற்றிய இப்போட்டியில் நெடுந்தீவு மகா வித்தியாலய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதலாமிடங்களை பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பறினர்.

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் பாடசாலை அதிபரின் வினைத்திறன்மிக்க வழிகாட்டல், மாணவர்களின் கடுமையானபயிற்சி என்பவற்றினூடக இவ்வணிகள் வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin