யாழ். மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் நற்கருணைப் பணியாளர்களுக்கான சிறப்பு தியானம் கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆயர் இல்ல சிற்றாலயத்தில்நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை தியானமும் மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் ஆசீரும், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் அருட்தந்தை றெக்ஸன் அவர்களின் கருத்துரையும் இடம்பெற்றன.

தொடர்ந்து யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தில் நற்கருணை வழிபாடும், ஒப்புரவு அருட்சாதனமும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுகளில் 30 வரையான நற்கருணை பணியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin