தேசிய மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட தேசிய மறையாசிரியர் தேர்வு கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மறைமாவட்ட ரீதியாக இலங்கையின் பல பாகங்களளிலும் நடைபெற்றது.

முதலாம் இரண்டாம் மூன்றாம் பிரிவுகளை உள்ளடக்கி நடைபெற்ற இத்தேர்வு யாழ். மறைமாவட்டத்தில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, நெடுந்தீவு றோ.க மகளீர் கல்லூரி, ஊர்காவற்துரை புனித அன்தோனியார் கல்லூரி, இளவாலை திருகுடும்ப கன்னியர் மடம், பருத்தித்துறை புனித தோமையார் றோ.க. பெண்கள் பாடசாலை, கிளிநொச்சி புனித திரேசா கல்லூரி, முழங்காவில் இரணைத்தீவு றோ.க.த.க. பாடசாலை, முல்லைத்தீவு றோ.க பாடசாலை ஆகிய 8 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றதுடன் 241 பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

By admin