கரவெட்டி புனித அந்தோனியார் பந்தி புனித வின்சன் டி போல் சபை வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை கரவெட்டி திரு இருதய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

கரவெட்டி பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு. ஞானப்பிரகாசம் தேவதாஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் சபையின் கடந்தகால எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் மறைமாவட்ட இயக்குனர் அருட்தந்தை நேசநாயகம், பொதுப்பந்தி அங்கத்தவர்கள் பருத்தித்துறை மறைக்கோட்ட பங்கு பிரதிநிதிகளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin