யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை கஜீஸ்காந்த் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருஅவையில் மாணவர்களின் பணிகள், மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பான தலைப்புக்களில் கருத்துரைகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 50 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin