இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக மட்டக்களப்பு மறைமாவட்டம் கல்முனை மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

கல்முனை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திருக்கோவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பீடப்பணியாளர்களுக்கான கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், குழுவிளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 100 வரையான பீடப்பணியாளர்கள் கலந்து பயனடைந்தனர்.

By admin