மாணவர்களுக்கு தமிழ்மொழி மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கோடு மன்னார் VMCT கலைமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான மணிமாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டி அண்மையில் நடைபெற்றது.

மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் 250ற்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வத்தடன் பங்குபற்றியதுடன் 110வரையான மாணவர்கள் வெற்றிபெற்றிருந்தனர். இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இரண்டு பிரிவுகளாக நடைபெற்றன.

மடு கல்வி வலய மாணவர்களுக்கான பரிசளிப்பு கடந்த மாதம் 08ஆம் திகதி மடு வலயத்திலும் மன்னார் கல்வி வலய மாணவர்களுக்கான பரிசளிப்பு 18ஆம் திகதி கடந்த புதன்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்திலும் நடைபெற்றன.

மன்னார் நகரசபை மண்டபத்தில் VMCT நிறுவன இயக்குனர் திரு. விமலேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கனகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் மன்னார் உதவி கல்வி பணிப்பாளர் திரு. ஞானராஜ் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin