மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் மட அருட்சகோதரிகளால் முன்னெடுக்கப்பட்ட மானிப்பாய் திருக்குடும்ப இளையோருக்கான திருயாத்திரை கடந்த 16,17ஆம் திகதிகளில் நடைபெற்றது.

அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர் மன்னார் மறைமாவட்டத்திற்கு திருயாத்திரை மேற்கொண்டு மருதமடு அன்னை திருத்தலம், சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயம், புனித செபஸ்தியார் பேராலயம், தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலயம், வங்காலை புனித அன்னாள் ஆலயம், முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயம், பள்ளிமுனை பெருக்கு மரம், மாந்தை, அல்லிராணிக்கோட்டை ஆகிய இடங்களை தரிசித்தனர்.

இந்நிகழ்வில் 33 இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin