தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பங்குத்தந்தையர்களுக்கிடையிலான கலந்துரையாடல் கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

கழக இயக்குநர் அருட்தந்தை சாள்ஸ் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இம்முறை தீவக மறைக்கோட்டத்தில் நடைபெறவுள்ள மறைமாவட்ட பொதுநிலையினர் எழுச்சி மாநாடு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பேனாட் றெக்னோ, கரம்பொன் பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன், புங்குடுதீவு பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ், மற்றும் தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

By admin