தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு குருநகர் புனித யாகப்பர் ஆலய யோசவ்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 01ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் ஜெயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலி, வழிபாடு இளையோர்களுக்கான கருத்தமர்வு, சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல சிரமதானம், மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு, விளையாட்டுக்கள், பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 25 வரையான இளையோர் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin