தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு உடுவில் – மல்வம் பங்கு மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் மறையாசிரியர்களும் அனுராதபுரம் பிரதேசத்தை தரிசித்து அங்குள்ள பிரசித்தி பெற்ற இடங்களை பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் 50 மறைக்கல்வி மாணவர்களும் 8 மறையாசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin