தேசிய மறைக்கல்வி வாரத்தை சிறப்பித்து குளமங்கால் பங்கில் மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்கள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் திருகோணமலை பிரதேசத்தை தரிசித்து அங்குள்ள பிரசித்தி பெற்ற இடங்ளை பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் 75 மறைக்கல்வி மாணவர்களும் 15 மறையாசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin