தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற சிறப்பு நிகழ்வுகள் கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை சேவியர் றஜீவா இருதயராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ‘மறைக்கல்வி வழியாக ஆழமான செப வாழ்வை நோக்கி” எனும் கருப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வில் திருப்பலிகள், கள அனுபவபயணம், ஆன்மீகப்பகிர்வு, உறவுவிருந்து, இறைவார்த்தை பகிர்வு, செபமாலை தியானம், நற்கருணை ஆராதனை என்பவை இடம்பெற்றதுடன் இவ்வாரத்தின் நிறைவுநாள் நிகழ்வு நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுகளில் மறைக்கல்வி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றிவருகின்றனர்.

By admin