மன்னார் மறைமாவட்டம் இலுப்பைக்குளம் புனித அடைக்கல அன்னை ஆலய 25வது ஆண்டு நிறைவும் ஆலய வருடாந்த திருவிழாவும் பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வரதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 07ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை டெஸ்மன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin