கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு 31ஆம் திகதி சனிக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 150 வரையான மாணவர்களும் 15 வரையான ஆசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin