மன்னார் மறைமாவட்டத்திலுள்ள சிறுநாவற்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்ல வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த தியான மண்டப கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

தியான இல்ல இயக்குநரான இந்திய நாட்டின் வின்சென்சியன் சபையை சேர்ந்த அருட்தந்தை சேவியர் அன்ரனி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் கலந்து புதிய மண்டபத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் வின்சென்சியன் சபை உலகளாவிய தலைவர் அருட்தந்தை ஜோன் கண்டதின்கர்,
இந்தியாவின் கோட்டயம் புனித சூசையப்பர் மாகாண தலைவர் அருட்தந்தை மத்தேயு காக்காட்டுபில்லி, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin