தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோர் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான விடுமுறைக்கால மகிழ்வூட்டல் நிகழ்வு கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தர்மபுரம் பங்கில் பணியாற்றும் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுக்கள், மகிழ்வூட்டல் நிகழ்வுகள், கருத்துரைகள் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்விற்கான அனுசரைணையை லண்டன் நாட்டில் வசிக்கும் திரு. கணவதிப்பிள்ளை கிருஸ்ணபவன் குடும்பத்தினர் வழங்கியிருந்ததுடன் இந்நிகழ்வில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி உப அதிபர் அருட்தந்தை சுமன் மற்றும் லண்டனில் இருந்து வருகைதந்த திரு, திருமதி சாந்தி தெய்வேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

By admin