தாத்தா பாட்டியர் தினத்தை சிறப்பித்து பரந்தன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் பரந்தன் புனித அந்தோனியார் மற்றும் முரசுமோட்டை புனித சதாசகாய அன்னை ஆலயங்களில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலிகளும் திருப்பலி நிறைவில் பேரப்பிள்ளைகளால் தாத்தா பாட்டியர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றன.

By admin