அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை றமேஸ் அவர்கள் Overseas Campus of Ceylon இல் தனது முகாமைத்துவக் கற்கை நெறியை நிறைவுசெய்து கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளார்.

இவருக்கான பட்டமளிப்பு கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இவர் தனது இளம்வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், முதுநிலை வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை லண்டன் கார்டிஃப் மெட்ரோ பொலிட்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ICBT campus இலும் நிறைவு செய்துள்ளார்.

By admin