யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் விசேட கூட்டம் கடந்த 10ஆம் திகதி சனிக்கிழமை கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

பேரவை தலைவர் கிருபானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள், போதைப்பொருள் பாவனையின் தீமைகள் ஆகிய தலைப்புகளில் உரைகளும் கலந்துரையாடலும் நடைபெற்றன.

இக்கலந்துரையாடலில் சிதைந்து வரும் பூமியையும், அழிந்துவரும் இளம் சமுதாயத்தையும் காப்பாற்றும் நோக்கிலானா செயற்திட்டங்கள் முன்மொழியப்பட்டன.

இக்கூட்டத்தில் யாழ். நாக விகாரை விமலதர்ம தேரோ, ரலிம் மௌலவி, யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் ஆகிய இணைத்தலைவர்களும் முப்பது வரையான அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

By admin