அமலமரித் தியாகிகள் யாழ்.மாகாண குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் முதல் குழுவினருக்கான தியானம் கடந்த மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையிலும் இரண்டாம் குழுவினருக்கான தியானம் கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் இம்மாதம் 03ஆம் திகதி வரையிலும் நடைபெற்றன.

மன்னார் கீரி பிரதேசத்தில் அமைந்துள்ள ஞானோதயத்தில் நடைபெற்ற இத்தியானத்தை உரோமிலுள்ள அலமமரித்தியாகிகள் சர்வதேச உயர் குருமட அதிபர் அருட்தந்தை கிறகோரி ஆரோக்கியசாமி அவர்கள் தியான உரைகள், சிறப்பு நற்கருணை ஆராதனைகள், திருப்பலிகள் என்பவற்றினூடாக நெறிப்படுத்தினார்.

இத்தியானத்தில் 65 வரையான குருக்கள் பங்குபற்றினார்.

By admin