மன்னார் மடுத்திருத்தல ஆவணிமாத திருவிழா பரிபாலகர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

இவ்வழிபாடுகளில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்த இலட்சக்கணக்கான மக்கள் பங்குபற்றி அன்னையின் ஆசீரை பெற்றனர்.

By admin