ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கேவலார் அன்னை திருத்தல 37வது வருடாந்த திருவிழா பணியக இயக்குநர் அருட்தந்தை நிரூபன் தார்சீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 09ஆம், 10ஆம் திகதிகளில் நடைபெற்றது.

09ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை செபமாலை பவனியுடன் வழிபாடுகள் ஆரம்பமாகி நற்கருணை ஆராதனையும் 12ஆம் திகதி சனிக்கிழமை திருவிழா திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் இடம்பெற்றன.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இவ்வழிபாடுகளில் ஜேர்மன் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பங்குபற்றி அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.

By admin