காலி மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் கடந்த 12ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை றாகம பிரதேசத்தில் அமைந்துள்ள தேவட்ட தியான இல்லத்தில் நடைபெற்றது.

இலங்கை தேசிய கத்தோலிக்க குடும்ப அப்போஸ்தலிக்க ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜிகான் குணதிலக அவர்கள் நெறிப்படுத்திய இத்தியானத்தில் காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் விக்ரமசிங்க அவர்களும் 28 வரையான குருக்களும் பங்குபற்றினர்.

By admin