யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட குருக்களுக்கான கூட்டம் கடந்த மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஒன்றிய தலைவர் அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கூட்டொருங்கிய திருஅவையின் இரண்டாவது அமர்வு பற்றி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 60 வரையான மறைமாவட்ட குருக்கள் பங்குபற்றினர்.

By admin