புங்குடுதீவு பங்கில் அனுஸ்ரிக்கப்படும் பீடப்பணியாளர் மாதத்தை சிறப்பித்து பீடப்பாணியார்களால் அங்கு பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் 03ஆம் திகதி சனிக்கிழமை பீடப்பணியாளர்களுக்கான தீப்பாசாறை நிகழ்வும் தொடர்ந்து 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
மூதாளர் இல்ல தரிசிப்பும் சிரமதானமும் இடம்பெற்றதுடன் தொடர்ந்துவரும் நாட்களில் சந்தை நிகழ்வு, கருத்தரங்குகள், சிறப்பு வழிபாடுகள், விளையாட்டுக்கள், புதிய அங்கத்தவர்களை உள்வாங்கும் நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வுகளில் பீடப்பணியாளர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி வருகின்றார்கள்.

By admin