கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக ஏற்பாட்டில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களிற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழங்காவில் இரணைமாதா நகர் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இணைப்பாளர் அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முழங்காவில் பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களின் உதவியுடன் இடம்பெற்ற இக்கருத்தமர்வை
இந்தியாவில் உளவியல் MSC படிப்பினை நிறைவுசெய்து அகவொளி குடும்பநல நிலையத்தில் பணியாற்றும் அருட்தந்தை ஜெராட் அவர்கள் நெறிப்படுத்தினார்.

இக்கருத்தமர்வில் 400 வரையானவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

 

By admin