ஊர்காவற்துறை கப்பலேந்தி மாதா சிற்றாலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

02ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 03ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் அருட்தந்தை எட்வின்நாதன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin