புதுக்குடியிருப்பு மந்துவில் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

01ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 03ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழாவும் அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் தலைமையில் குணமாக்கல் வழிபாடும் இடம்பெற்றன.

திருவிழா திருப்பலியை புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் யோசப் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியரும் விடுதிக்காப்பாளருமான அருட்தந்தை துசியந்தன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin