இலங்கை நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை, இராணவ கட்டுப்பாட்டிலுள்ள வசாவிளான் பிரதேச விடுவிப்பு, இந்தியாவிற்கான Indigo விமான சேவையை ஆரம்பித்தல், இலங்கை இந்நியாவிற்கான கப்பல் சேவையை ஆரம்பித்தல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் வட மாகாண ஆளுநர் திருமதி. சாள்ஸ், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

By admin