அமலமரித் தியாகிகள் சபையினரால் முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த “மலரும் முல்லை” சமூக மேம்பாடு மற்றும் கல்விவள நிலைய கட்டட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 30ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜீவரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. உமா மகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து புதிய கட்டடத்தை திறந்துவைத்தார்.

இக்கட்டடத்திற்கான நிதி அனுசரணையை வழங்கிய முல்லை Foundation நிறுவன தலைவர் திரு. அன்ரன் அவர்கள் நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்துவைத்தார்.

By admin