மன்னார் மறைமாவட்டம் பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எமில் எழில்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 03ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin