நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை முன்பள்ளி சிறார்களால் சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை நெடுந்தீவு மத்தி தென்னிந்திய திருச்சபை வளாகத்தில் நடைபெற்றது.

சபையின் ஆதீன செயலர் போதகர் சதீஸ் டானியல் அவர்கள் பிரதம விருந்தினராகவும் நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன், நெடுந்தீவு திருக்குடும்ப கன்னியர்மட முதல்வி அருட்சகோதரி சுகிர்தசெல்வி பொனிபஸ், நெடுந்தீவு பிரதேச செயலக முன்பிள்ளை பருவ உத்தியோகத்தர் திருமதி டானியல் நிசாந்தினி, முன்பள்ளிகளின் இணைப்பாளர் திருமதி வசந்த சகாயராணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் நெடுந்தீவு கல்விக்கோட்ட அதிபர்கள் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

 

 

By admin