மன்னார் மறைமாவட்ட கலையருவி சமூக தொடர்பு அருட்பணி மையத்தினால் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் ஜிம்பிரவுண் நகர் திருஇருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

கலையருவி இயக்குநர் அருட்தந்தை டக்ளஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin