மானிப்பாய் புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 15ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை தேவராஜன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீரும் இடம்பெற்றன.

By admin