தவக்கால பக்தி இசைகளான பசாம், புலம்பல், வியாகுல பிரசங்கம் மற்றும் ஒப்பாரி என்பவற்றை இலங்கையிலுள்ள உலக மரபுரிமைகளாகப் பிரகடணப்படுத்தும் நோக்கில் இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களகத்தால் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமைச்சின் பணிப்பாளர் திருமதி சதுரி பிந்து அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை லால் பெர்னான்டோ அவர்கள் கலந்து இது தொடர்பாக உரையாற்றினார்.

தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்று யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் மற்றும் அருட்தந்தையர்கள் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த கலைஞர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin