கட்டைக்காடு பங்கில் நற்கருணைப் பணியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.

கட்டைக்காடு புனித கப்பலோந்தி மாதா ஆலயத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் திரு. மருசலீன் சாள்ஸ் அன்ரனி மற்றும் திரு. ஜோசப் மக்ஸிமஸ் வலன்ரைன் ஆகியோர் நற்கருணை பணியாளர்களாக தமது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள்.

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் வழிநடத்தலில் நற்கருணைப் பணியாளர்களாக இவர்கள் உருவாக்கப்பட்டு, யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

By admin