2023, 24ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப் படிவம் நிரப்புதல் தொடர்பான தெளிவூட்டல் கருத்தமர்வு கடந்த 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் வவுனியா பல்கலைக்கழக பேராசிரியர் அனந்தினி நந்தகுமார் அவர்கள் வளவாளராக கலந்து இக்கருத்தமர்வை நெறிப்படுத்தினார்.

உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய 150 வரையான மாணவர்கள் இக்கருத்தமர்வில் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin