Month: October 2024

இளையோருக்கான வருடாந்த தியானம் பிற்போடப்பட்டுள்ளது

தேசிய கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் தலவில புனித அன்னம்மாள் திருத்தலத்தில் முன்னெடுக்கப்படவிருந்த இளையோருக்கான வருடாந்த தியானம் பிற்போடப்பட்டுள்ளது. நம்பிக்கையின் திருப்பயணிகள் எனும் கருப்பொருளில் இம்மாதம் 11,12,13ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த இத்தியானம் சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.

செம்பியன்பற்று சென். பிலிப்நேரிஸ் முன்பள்ளி ஆசிரியர், சிறுவர்தின நிகழ்வுகள்

செம்பியன்பற்று சென். பிலிப்நேரிஸ் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் சிறுவர்தின நிகழ்வுகள் கடந்த 09ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றன. சென். பிலிப்நேரிஸ் முன்பள்ளி முகாமைத்துவ குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் தாளையடி – செம்பியன்பற்று…

வலைப்பாடு பங்கு உறுதிப்பூசுதல்

வலைப்பாடு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலயத்தில் இடம்பெற்ற…

மானிப்பாய் றோ.க.த.க பாடசாலை ஆசிரியர் தினம்

மானிப்பாய் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் வழிபாடும் தொடர்ந்து ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் கலைநிகழ்வுகளும்…

இரணைப்பாலை பற்றிமா அன்னை ஆலய முதல்நன்மை

இரணைப்பாலை பற்றிமா அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 12ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரோ டெனிசியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 20 பிள்ளைகள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.