Month: October 2024

கொழும்புத்துறை புனித வளனார் முதியோர் இல்லம் மக்கள் பாவனைக்காக திறப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித வளனார் முதியோர் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த மூதாளர் தங்குமிட கட்டடத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இக்கட்டத்தை ஆசீர்வதித்து அதனை முதியோர் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கும் நிகழ்வு கடந்த 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரி…

திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி வாணி விழா

யாழ்ப்பாணம் டேவிட் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வாணி விழா 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி. மேரி அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வழிபாடும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.…

சூரியவெள்ளி விருது வழங்கும் நிகழ்வு

ஜேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டு 37 ஆண்டுகள் அதன் வளர்ச்சியில் துணைநின்று பணியாற்றியவர்களை கௌரவிக்கும் முகமாக முன்னெடுக்கப்பட்ட சூரியவெள்ளி விருது வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை ஜேர்மன் எசன் மாநகரில் நடைபெற்றது. பணியக இயக்குநர்…

தேசிய வூசோ, தைக்வொண்டோ போட்டி

தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட வூசோ குத்துச் சண்டை போட்டி கடந்த 4, 5, 6 ஆம் திகதிகளில் கண்டி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி செல்வி ஜீட் வசீகரன் டிவோன்சி அவர்கள் 18வயதுக்குட்பட்ட…

செயற்பட்டு மகிழ்வோம் உடற்பயிற்சி போட்டி

இலங்கை கல்வித் திணைக்களத்தால் யாழ். கல்வி வலய பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் உடற்பயிற்சி போட்டி கடந்த 05ஆம் திகதி சனிக்கிழமை புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் தரம் 03,04,05…